Saturday, August 7, 2010

காதல் படுத்தும் பாடு

வானத்தில் நிலவும்
உலவும் மேகமும்
ஓடிப் பிடித்து விளையாடுகின்றது.

"அது போல் தான்
உன் கூந்தலும்".

நீ தலை துவட்டும் போதும்
தலை வாரும் போதும்
முன்னால் வந்து
தொட்டுச் செல்கிறது

உன் முகத்தை.................................

காதல் படுத்தும் பாடு

ஒரு முறை
உன் கூந்தலை
விளையாட்டாய் இழுத்து விட்டேன்
கோபத்தில்
திட்டிச் சென்றாய்

ஏன் ?

என்று கேட்ட போது

"நீ ஒவ்வொரு முறை
என் மடி சாய்கையில்
உன் முகத்தை வருடும்
நம் காதல் குழந்தை
கூந்தல்".

என்றாய்......................

காதல் படுத்தும் பாடு

காற்றின் வருடலைப் பூவிடம் கேட்டேன்
அது
பூத்துச் சிரித்தது.

உன் மூச்சின் வருடலை என்
இதயத்திடம் கேட்டேன்
உடல்
வியர்த்துக் கொட்டியது


இது தான் உணர்ச்சியோ ??????

Wednesday, May 19, 2010

ஒரு நொடி சண்டை

உன் கண்கள் "கத்திச்சண்டை" போடுகின்றது,
என் விழிகளிடம்.

உன் கண்கள் "கத்தி" சண்டை போடுகின்றது,
என் விழிகளிடம்.

நான் வேருஒரு பெண்ணை பார்கும்போது................

-சரவனண்

Monday, October 26, 2009

Tuesday, June 2, 2009

அக்கா உங்களுக்காக!!!!!!!!!!!!!

செவ்வானம் போல்
உண்மையாக சிவக்கும்
உங்கள் கன்னங்களால் தான்
சிரிப்புக்கு பெருமை!

மயில்தோகை போல்
அழகாக விரிந்துகிடக்கும்
உங்கள் கூந்தலால்தான்
மென்மைக்கு பெருமை!

கார்மேகம் போல்
உங்கள் இமைகளில்
இணைந்திருக்கும் மையால் தான்
கருமைக்கு பெருமை!

புல்வெளியில் பனித்துளி போல்
உங்கள் மூக்குத்தி

உறைபனி போல் குளிரவைக்கும்
உங்கள் பேச்சு

கானல் நீர் போல்
உங்கள் கோபம்!

இப்படி
இயற்கை பொறாமை கொள்ளும்
உங்களின்
தம்பியாக இருப்பதால்
எனக்கு பெருமை!

அக்கா நீங்கள் என்றும்

அன்பிற்கு அர்தமாய்,
பாசத்திற்கு பாதையாய்,
நேசத்திற்கு தோழியாய்,
நட்பிற்கு குழந்தையய்,
கோபத்திற்கு எதிரியாய்,

மாறாமல்
என்னை மறவாமல்........

உங்கள் வாழ்க்கை கோலத்தில்
ஓர் புள்ளியாய்!

அன்புடன்,
சரவணன்

Monday, May 18, 2009

ஓர் அனாதையின் இறுதி நொடி

பெண்ணே!கால்கள் ஊனம் என்றேன்,
உன் கரம் கொடுதாய்,
எழுந்து நின்றேன்.

பார்வை இல்லை என்றேன்,
உன் தோள் கொடுத்தாய்
பிடித்து நகர்ந்தேன்!!!!!!

தோழியே!என் பெற்றோரை பார்த்ததில்லை,
நான் வருந்தாத நாட்கள் இல்லை!!!!!!!!!
என் நினைவுத் தெரிந்து நான் சிரித்ததில்லை

இன்று முதல் முறை உன்தன் மடியில்!!!!!!!

அன்பின் அற்த்தத்தை உணர்ந்து விட்ட
ஆனந்தத்தில்,
நட்பின் ஆழத்தை புரிந்துகொண்ட
பூரிப்பில்,
சிர்த்துக்கொண்டே!!!!!!
பிணமாய்!!!!!!!!!!!